#Breaking :சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு

Published by
Venu

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனுடன் சேர்த்து சிபிஐ கைது செய்யாமல் இருக்க தடைகோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு இடையில் கடந்த  ஆகஸ்ட் 21 ஆம் தேதி  சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு சிபிஐ  காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து சிபிஐ கைது செய்யாமல் இருக்க தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் இன்று அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை நடைபெற்றது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக  தெரிவித்தது.மேலும் கீழமை நீதிமன்றங்களை அணுகவும் அறிவுறித்தியது.இதனால் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியும்.

இதனை தொடர்ந்து சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிதம்பரம் தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்கள்.இரு தரப்பினரும் தங்களது வாதங்களை கடுமையாக முன் வைத்தனர்.அதிலும் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் சிதம்பரம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதற்கு பதிலாக சிதம்பரத்தை அமலாக்கத்துறையிடம் சரணடைய தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பினரின் வாதங்களுக்கு பின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது .இதற்கு பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தனி சிறையில் சிதம்பரத்தை அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Recent Posts

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

1 hour ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

2 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

2 hours ago

“9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்… இன்னும் 2 மாசம் தானே” – விஷால் கலகல பதில்.!

சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…

3 hours ago

”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…

4 hours ago

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

4 hours ago