ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொழிலாளர்களுக்கு இடையே மோதல்!

In Andhra Pradesh, there have been clashes between two persons, members of the same party, for personal reasons.

ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வல்லபனேனி வம்சிமோகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் சென்றபின், சிலருக்கு இடையே வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரம் குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் அவர்கள் கூறுகையில்,  ‘ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் யாரும் காயமடையவில்லை. காவல்துறையினர் எம்எல்ஏ உடன் வந்திருந்தனர். இது தனிப்பட்ட காரணங்களால் வந்த பிரச்சினை தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது அரசியல் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.’ என்றும் தெரிவித்துள்ளார்.