வைரல் வீடியோ..!கல்லூரி கலை விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய கலெக்டர்..!

பத்தனம்திட்டா மாவட்ட பெண் கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் கல்லூரி கலை விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பத்தனம்திட்டா மாவட்ட பெண் கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் கல்லூரி கலை விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டாக்டர் திவ்யா எஸ்.ஐயர் கேரள மாநிலத்தை சேர்ந்த பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆவார். மேலும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வான சபரிநாதனின் மனைவி. இவர் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கல்லூரியின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக கலைவிழாவை தொடங்கி வைப்பதற்காக வருகை புரிந்துள்ளார்.

அப்போது விழாவை தொடங்க அங்கிருக்கும் மாணவ, மாணவியர்கள் பாடல் ஒன்றிற்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த நடனத்தை மேடையில் இருந்து ரசித்து கொண்டிருந்த கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் யாரும் எதிர்பாராவண்ணம் கீழே இறங்கி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.unknown node

p>