எதிர்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை!

The consultative meeting decided to raise issues in parliament following the rise in prices.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்ப ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் சரத்பவார், டிஆர் பாலு, சஞ்சய் ராவத், மல்லிகார்ஜுன, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

12 எம்.பி.க்கள் சஸ்பென்ட், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பென்ட் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்ப கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.