ஹைதராபாத்:சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா...!

Corona infection has been confirmed in 8 Asian lions at the Nehru Zoo in Hyderabad.

ஹைதராபாத்தின் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் ஆசிய சிங்கங்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து,பரிசோதனை செய்ததில் எட்டு சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து, சிசிஎம்பி(CCMB) இயக்குனர் மற்றும் மரபியல்,எபிஜெனெடிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இந்திய விஞ்ஞானி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில்,”மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் மூலமாக மட்டுமே இந்த எட்டு சிங்கங்களும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று  கூறினார்.