அதிகரிக்கும் கொரோனா..கேரளாவில் இன்று 9,258 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 9,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு 2,13,499 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,092 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,35,144 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 771 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 77,482 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.