மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், நான் பலவீனமாக இருப்பதை உணர்ந்தேன். என் மருத்துவரை அணுகியபோது, எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நான் என்னை என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருமே கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரமாக இருக்கவும் என பத்திவிட்டுள்ளார்.
unknown node