கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் – பசவராஜ் பொம்மை!

Published by
Rebekal

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது மிக அதிக அளவில் காணப்படுகிறது. இது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக கடந்த 11ம் தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால் காலை நேரங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் கடைகளுக்கு செல்வதாள் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும், தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கிராமங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் அதன் தீவிரத் தன்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், இதனால் ஊரடங்கு மேலும் தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யாதகிரியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 5 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், இவ்வாறு விதிகளை நடக்காமல் மக்கள் நடந்து கொள்ளும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும்? எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்க வேண்டும் எனவும், அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 23-ஆம் தேதி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

16 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

17 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

18 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

19 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

19 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

20 hours ago