கொரோனா நோயாளிகளின் மரணத்தால், மன அழுத்தத்தில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலர் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விவேக் ராய் என்ற மருத்துவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு மேலாக அந்த பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார். இதனை அடுத்து இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கூறுகையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிறந்த மருத்துவர் விவேக். இவர் பணிபுரிந்த காலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார். நோயாளிகள் படும் துன்பத்தையும், அவர்களது மரணத்தையும் பார்த்த அவர் வெறுப்புணர்வில், கடினமான முடிவெடுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…