டெல்லியியை சொந்த ஊராக கொண்டவர்தான் பொறியியல் பட்டதாரியான மாணவ் ஷர்மா ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து தனது தங்கையுடன் டெல்லி ரோகிணி பகுதிக்கு, சென்று .கொண்டிருந்தார்.
unknown nodeஅப்போது ஒரு பாலத்தின் மீது செல்கையில் பட்டம் ஒன்று அவர் கழுத்தில் சிக்கி கொண்டது. அந்த பட்டம் விட மாஞ்சா கயிறு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. பதறிப்போன சகோதரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தகவலை டெல்லி ஏடிஜிபி ராஜேந்திர சிங் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.