Categories: இந்தியா

மழைக்கு பிறகு சற்று உயர்ந்த டெல்லி காற்றின் தரம்.. ஆனாலும், மோசமான அளவு தான்.!

Published by
மணிகண்டன்

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்

இந்நிலையில், டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலை என்ற நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேறியுள்ளது. மழைக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய காற்றின் தர அளவீட்டில் 407 ஆக இருந்த காற்று மாசு அளவு, தற்போது 361ஆக குறைந்துள்ளளது.

டெல்லியில் , நேற்று காலை 10 மணியளவில், மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் காற்றின் தரம் 407 ஆக இருந்தது. ஷாதிபூரில், 405 ஆக இருந்தது. சோனியா விஹார் 399, அசோக் விஹார் 390, பவானா 389, வசீர்பூர் 385, ITO மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய இரண்டும் 381 என காற்று மாசு பதிவாகி இருந்தது.

தற்போது, காற்று மாசு அளவானது, டெல்லியில் ஆனந்த் விஹார் 295, ஆர்.கே.புரம் 230, பஞ்சாபி பாக் 244, மற்றும் ITO 263 என பதிவாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

14 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago