இன்று டெல்லி வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கண்டோ பலேசா கிராமத்திற்கு அருகே 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவை இணைக்கும் எல்லைப் பகுதியில் இன்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் ஜம்மு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில அதிர்வு நடவடிக்கை எதிரொலித்தது. அதிர்ஷ்டவசமாக, உடனடி காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அதைப்போலவே மணிப்பூரிலும் உக்ருல் இடத்தில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். பல இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
unknown node