குடும்ப நண்பர் பிளாக் மெயில்…! பெங்களூர் தம்பதியினர் தற்கொலை..!

Published by
murugan

பெங்களூரு பாசவேஸ்வரநகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரு குடும்ப நண்பர் தங்களை பிளாக்மெயில் செய்ததாகக் கூறி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
மோகன், 65, மற்றும் அவரது மனைவி நிர்மலா 54  இவர்கள்தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக மஞ்சுநாதநகரில் வசித்து வந்தனர். மோகன் பி.இ.எம்.எல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியராக இருந்து உள்ளார். ​​நிர்மலா ஒரு இல்லத்தரசி.
இவர்கள் இருவரும் தண்ணீரில் கலந்த டாய்லெட் கிளீனரை சாப்பிட்டு இறந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு மாடி வீட்டின் தரை தளத்தில் அவர்களது மகன் கிரண் அவரது  மனைவியுடன் வசித்து வருகிறார்.
காலையில் கிரண் கதவை தட்டும்போது அவர்களிடம் இருந்து  எந்த சத்தமும் வராததால் அவர் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது தம்பதியினர் இருவரும் இறந்துகிடந்தது உள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார்  நிர்மலா தமிழில் எழுதிய ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில் ,மனோகர் என்ற குடும்ப நண்பர் தன்னுடன் உறவு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் எங்களை  பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்.
மேலும் அவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தி உள்ளார் என எழுதி இருந்தது. தற்கொலை கடிதத்தின் அடிப்படையாக வைத்து  மனோகர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
 

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago