2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.!

Go First

நிதி நெருக்கடி காரணமாக 2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.

நிதி நெருக்கடி காரணமாக விமான நிறுவனமான ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம், திவால் நிலைக்கான மனுவையும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார்.

இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘Go First’ விமான நிறுவனம், வரும் மே 3, 4ம் தேதிகளில் விமான சேவையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.

அதாவது, பிராட் மற்றும் விட்னி (P&W) இன்ஜின்களை வழங்காததால் வாடியா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் சுமார் 28 விமானங்களை தரையிறக்கியுள்ளதாக கௌசிக் கோனா கூறியுள்ளார். இதனால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.

Go First என்பது கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தோல்வியின் விளிம்பில் இருக்கும் மற்றொரு இந்திய விமான நிறுவனம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெட் ஏர்வேஸ் இந்த நிதிச் சிக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir