2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.!

நிதி நெருக்கடி காரணமாக 2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.
நிதி நெருக்கடி காரணமாக விமான நிறுவனமான ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம், திவால் நிலைக்கான மனுவையும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார்.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘Go First’ விமான நிறுவனம், வரும் மே 3, 4ம் தேதிகளில் விமான சேவையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதாவது, பிராட் மற்றும் விட்னி (P&W) இன்ஜின்களை வழங்காததால் வாடியா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் சுமார் 28 விமானங்களை தரையிறக்கியுள்ளதாக கௌசிக் கோனா கூறியுள்ளார். இதனால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
Go First என்பது கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தோல்வியின் விளிம்பில் இருக்கும் மற்றொரு இந்திய விமான நிறுவனம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெட் ஏர்வேஸ் இந்த நிதிச் சிக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025