கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Shirgao Jatra In Goa

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்பொது, காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கூட்ட நெரிசலுக்கான காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலையில் நடந்தது, கோயிலில் பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கைக் காணவும் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் இணைந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, பிச்சோலிம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்