குறித்த நேரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை... ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும் சஸ்பெண்ட்.!

ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா

ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா உள்துறை அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை, விகாஸ் பவனில் வைத்து மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 25 புகார்கள் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு புகாராக, போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் ஒரு வழக்கறிஞர் , புகார் கூற வந்த போது, காவல்நிலையத்தில் பெரும்பாலானோர் குடித்து இருந்ததாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதமானதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக சுக்புரா காவல் நிலையத்தில் அந்த சமயம் பணியாற்றிய அணைத்து ஊழியர்களையும் அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.