ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் “ஹிஸ்புல் முஜாகிதீன்” பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர், ரங்ரீத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, இன்று மாலை அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவர்கள் வருவதை அறிந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்த, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாகவும், ஒருவன் சரணடைந்ததாகவும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர் என்றும், மற்றவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ என்கவுண்டரில் கொல்லப்பட்ட பின்னர், அவரின் பொறுப்புகளை ஷைப்புல்லா ஏற்றுக்கொண்டார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…