இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 36 பேர் பலி.!

coronavirus

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,611 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,611 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,60,678-லிருந்து 4,49,64,289 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் 36 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 5,31,642ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,587 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,99,415 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,244 -லிருந்து  33,232 ஆக குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்