இந்தியா அடுத்த 6- 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளலாம் – எய்ம்ஸ் இயக்குனர்!

India is likely to face a third wave of corona in the next 6 to 8 weeks, AIIMS chief Randeep Gularia said.

இந்தியா அடுத்து வருகிற 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருந் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட உள்ளதாக பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா  அவர்கள் இது குறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், பெரும்பாலான மாநிலங்கள் தற்பொழுது பொது முடக்கத்திலிருந்து கொடுத்து வருவதாகவும் ஆனால், மக்கள் முதல் இரண்டு அலைகளில் இருந்து எவ்வித பாடமும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் முறையாக அணிவதில்லை அதனால் தான் இந்தியா மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொரோனா மூன்றாம் அலையை இந்தியா வருகின்ற 6 முதல் 8 வாரங்களில் எதிர் கொள்ளலாம் எனவும், இந்த எண்ணிக்கை தற்பொழுது வெளிப்படையாக தெரிய சற்று காலம் ஆனாலும், இப்போது இருந்தே இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கான பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என தான் கருதுவதாகவும், மக்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.