செப்டெம்பர் 21 முதல் “20 ஜோடி குளோன் ரயில்கள்” இயக்கம் – இந்திய ரயில்வே அறிவிப்பு.!

செப்டெம்பர் 21 முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கம் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது இயங்கும் 310 சிறப்பு ரயில்களுக்கு கூடுதலாக, வரும் 21ஆம் தேதி முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே நேற்று அறிவித்தது. ரயில்வே துறையில் குளோன் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும் . இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 19 முதல் தொடங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாகவே இயங்கும். 10 நாட்களுக்கு முன்பாகவே குளோன் ரயில்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு குளோன் ரயில்கள் இயக்கப்பட்டதில்லை.
அந்த வகையில, குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு இந்த 20 ஜோடி குளோன் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக என தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இயங்கும் சிறப்பு ரயில்களை விட வேகமாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025