ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய இந்தியர்கள்-‘வந்தே மாதரம்’ என முழக்கம்..!

ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் வழியாக திரும்பிய இந்தியர்கள் வந்தே மாதரம் என முழங்கிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். மேலும், தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நகரத்தில் உள்ள காபூலில் இருந்த 120 இந்தியர்களை இந்தியா மீட்டு வந்துள்ளது.
அங்கு இருந்த தூதரக தலைவர்கள் முதல் இதில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் விமானம் வழியாக குஜராத் வந்தடைந்தனர். பின்னர், பேருந்து வழியாக சொந்தநாட்டிற்குள் நுழைந்த இந்தியர்கள் ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதாகி ஜே’ என்றும் முழக்கங்களை எழுப்பியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025