நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன.
இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியும் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்ள பிரதான கட்சிகள் டெல்லிக்கு விரைந்துள்ளன.
முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தான் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என திட்டவட்டமாக கூறிச்சென்றார். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளியில் கூறவில்லை. மேலும், இன்று இந்தியா கூட்டணியில் உள்ள RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி ANI சேத்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்து வரும் செய்திகள் வெறும் வதந்திகள். நாங்கள் பாஜக தலைமையிலான NDAவில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நாங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டோம். நிதிஷ் குமார் தற்போது டெல்லியில் இருக்கிறார். அதில் JD(U) தங்கள் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிப்பார். நரேந்திர மோடியை பிரதமராக முன்மொழிவார் என JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறினார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…