இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததுபோல் இல்லை – ஜோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதற்கு ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். ஆனால் என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதற்கு அக்கட்சிதான் காரணம் என்று குறிப்பிட்டார்.
இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததுபோல் இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் என் வாழ்க்கையில் 2 திருப்புமுனை நடந்துள்ளது. அதில் ஒன்று எனது தந்தை மரணம், மற்றோன்று தற்போது பாஜகவில் இணைந்தது என தெரிவித்தார். இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில், பாஜகவிற்கு இது மகிழ்ச்சியான நாள் என்றும் தற்போது பாஜக குடும்பத்தில் உறுப்பினர் ஆகியுள்ளார் எனவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த சிந்தியா குடும்பமும் பாஜகவில் தான் உள்ளது என்றும் அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்யத்தான் என குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025