கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேருக்கு கொரோனா.
கேரளாவில் இன்று 1417 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 36,932 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து 1426 பேர் குணமடைந்தனர். இதுவரை 24,042 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதற்கிடையில் 12,753 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.