முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமரும், முக்கியமான விடுதலைப் போராட்ட வீரருமாகிய லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் காட்டிலுள்ள அவரது நினைவிடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்தின் சிறந்த குடிமகனாக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது எளிமை, நடத்தை மற்றும் நேர்மை அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…