சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் சிங்கத்திற்கு பலியான நபர்!அதிர்ச்சியான தகவல்!

Default Image
  • குஜராத்தில் சிறுநீர் கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்த நபர் சிங்கத்திற்கு பலியாகியுள்ளார்.
  • இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் ஏறக்குறைய 1,412 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது.இது சிங்கங்களின் வசிப்பிடமாக அமைந்துள்ளது.மேலும் அங்கு சிறுத்தை ,புலி போன்ற விலங்குகளும் வசித்துவருகின்றன.

அப்பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி உலாவருவதும் உண்டு.இந்நிலையில் குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட வன பகுதியை ஒட்டிய ஜீரா கிராமத்தில் கடுபாய் பிலாத் என்பவர் வசித்து வந்துள்ளார்.

அவர் இன்று காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் சிறுநீர் கழிக்க வந்துள்ளார். அப்போது ஒரு சிக்கன் அவர் மீது பாய்ந்துள்ளது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

பின்னர் அவரின் உடலை கைப்பற்றிய வன துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war