குட் நியூஸ்: மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,91,440 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மேலும் 282 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,165 ஆக உயர்ந்தது. இதனால் உயிரிழந்தோரின் சதவீதம் 3.62 ஆக உள்ளது.

மேலும் 10,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,32,277 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.34 சதவீதமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,44,694 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.