மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா கைது.!

2008-ம் ஆண்டுமும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2008-ம் ஆண்டுமும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனைவழங்கப்பட்டது. இந்நிலையில், 10 வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுவந்த தஹாவூர் ராணா உடல்நிலை மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இந்தியா விசாரணை நடத்த தேவை உள்ளதால், விடுதலை செய்யப்பட்ட அடுத்த இரண்டாவது நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில், தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.