தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கை பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களாலும் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய செய்தியாக தற்போது பரவி வருகிறது.
இந்நிலையில்உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அவர்களிடம் எனது அம்மா இறந்து விடுவார் தயவுசெய்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று ஒரு நபர் போலீஸாரிடம் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் பிபிஇ உடையில் ஒரு நபர் மருத்துவமனைக்கு வெளியே நிற்கிறார். அங்கிருந்து அவர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அப்போது காவலில் இருந்த போலீசாரிடம் முழு கவச உடையில் நிற்கும் நபர், ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சுகிறார். தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினரிடம் உறுதியளித்து தான் நான் இங்கு வந்தேன் என்று முழங்காலில் நின்று கைகூப்பி கெஞ்சுகிறார்.
unknown node