ஏ.சி-க்கு புதிய விதிமுறை.., மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் சொன்ன தகவல்.!

ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார்.

Air Conditioner manohar

ஹரியானா : நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்பாடு தொடர்பாக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்படி 20°C-க்கு கீழ் குறைக்கவோ, 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது. காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், முதற்கட்டமாக வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களிலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆற்றல் சேமிப்பு, மின் நுகர்வு குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது மனோகர் லால்  கட்டார் கூறுகையில், “ஏசியின் வெப்பநிலையை தரப்படுத்த ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது மிக விரைவில் செயல்படுத்தப்படும். இப்போது ஏசியின் வெப்பநிலை 20 டிகிரி முதல் 28 டிகிரி வரை இருக்கும். அதாவது, குளிர்விக்க 20 டிகிரிக்கு குறைவாகவும், வெப்பப்படுத்த 28 டிகிரிக்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது.

இது ஒரு வகையான பரிசோதனை, நாங்கள் இதை முதல் முறையாகத் தொடங்குகிறோம். ஜப்பான் போன்ற நாடுகளில் இதை 26 டிகிரிக்கு தரப்படுத்தியது. இத்தாலி இதை 23 டிகிரியில் செய்துள்ளது, நாங்கள் அதை 20 டிகிரியாக மாற்றியுள்ளோம். 20 டிகிரிக்குக் குறைவாக இயங்கும் ஏசியுடன் யாரும் தூங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்