வடகிழக்கு கனமழை எச்சரிக்கை..! அசாமில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு..!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்தது , மேலும் ஜூலை 19 முதல் 21 வரை மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இது அருணாச்சல பிரதேசத்திற்கு 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதல் சிவப்பு எச்சரிக்கையும், ஜூலை 21 க்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் அறிவித்திருந்தது, எதிர்பார்க்கப்படும் மழையால் அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது, மேலும் வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 27 ல் 39.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 76 பேர் இறந்த நிலையில், 26 பேர் நிலச்சரிவில் கொல்லப்பட்டதாக மாநில அரசின் புல்லட்டின் தெரிவித்துள்ளது.