மீண்டும் ஒரு 'சூப்பர்' புயல்.! தாங்குமா இந்த இரு மாநிலங்களும்?!

ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக

ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 185 கிமீ வேகத்திலும் கரையை கடக்கும்

21 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் கடலில் உருவான சூப்பர் புயல் பல்லாயிரக்காணோர் உயிரை காவு வாங்கி இருந்தது. அந்த சூப்பர் புயல் ஒடிசா கடற்கரையில் சுமார் 200 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. தொடர்ந்து 36 மணிநேரம் இந்த வேகம் குறையாமல் இருந்தது. அதனால், ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்கள் உருக்குலைந்தன.

unknown node

இந்த சூப்பர் புயலுக்கு 10,000 பேருக்கு மேலானோர் பலியாகியிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அம்மாநில அரசுகள் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து புயல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டன.

unknown node

தற்போது வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 185 கிமீ வேகத்திலும் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் ஒடிசா , மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆம்பன் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சகம், பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாநில அரசுகளும் இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.