எதிர்கட்சிகள் முழக்கம்: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்கட்சிகள் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தலைமை தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் முழக்கம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து. மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள் நடைபெற்ற நிலையில், இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.