சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாக அவர் வீடியோ பிரசங்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்று பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும், கைலாசாவில் வசித்துவரும் நித்தியானந்தா, உயிரிழந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கைலாசா […]
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா 2024 (Waqf (Amendment) Bill, 2024) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா, 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 திருத்தங்கள் உள்ளடங்கியுள்ளன, மேலும் இது வக்பு சொத்துகளின் நிர்வாகம், பதிவு மற்றும் வாரியங்களின் செயல்பாடுகளை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, இந்த […]
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என திமுக உள்ளிட்ட தமிழக பிராந்திய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மும்மொழி கொள்கை மூலம் மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் இதில் இந்தி திணிக்கப்படவில்லை எனக் பாஜகவினர் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் உத்திரப் […]
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து […]
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு விபத்து ஏற்பட்டு ரயில்கள் தீப்பிடித்ததால் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மின்சார உற்பத்தி […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவர் வருகை புரிந்தது, அங்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு தீவிரம் சேர்த்துள்ளது. இதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுக்களில் மிக முக்கியமானது பிரதமர் மோடி ராஜினாமா பற்றிய செய்திகள். அதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் எனும் இந்துத்துவா அமைப்பானது பாஜகவின் சித்தாந்த அடித்தளமாகவும், […]
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, ‘மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்’ என்று எச்சரித்துள்ளார். மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க சிவாஜி பூங்காவில் நடந்த குடி பத்வா பேரணியில் உரையாற்றிய அவர்,”மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். மும்பையில் வாழ்ந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தாய்மொழி உள்ளது. அதனை மதிக்க வேண்டும், இந்தி திணிப்பு வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக […]
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள எப்படி நிற்பது எனத் தெரியாமல் தடுமாறினார். அப்போது, அந்த பெண்ணை புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்ணின் தோள் பட்டையில் கை வைத்து கேமராவை பார்த்து திரும்பமாறு கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமுதாக வலைத்தளங்களில் […]
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, நிலநடுக்கம் காரணமாக இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த […]
டெல்லி : மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 25 அன்று முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது பாஜக அரசு 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ரூ.28,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது அதே சமயம் பெண்கள் நலனுக்காக ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய ரேகா குப்தா ” இது ஒரு சாதாரண பட்ஜெட் அல்ல. டெல்லி […]
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம், தற்போது அவரை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது. அந்த தீ விபத்தில் அறைக்குள் இருந்த குப்பைகளில் கட்டுக்கட்டாக பணமும் எறிந்துபோனதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து தற்போது விசாரணை வளையத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளார். மார்ச் 14ஆம் தேதியன்று டெல்லியில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து தீயணைப்புத்துறைக்கு போன் வருகிறது. அதில், […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ” மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை நிச்சயமாக உறுதி செய்வோம். தற்போது எங்களுடைய […]
உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தய விழாக்கள் சந்தோசமாக நடந்துவந்துள்ளது. அப்படி தான் நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோசமாக நடந்து முடியும் என உறவினர்கள் நினைத்த நிலையில், அங்கு வந்த மணமகனின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வன்ஷ் வால்மீகி என்பவர் பரபரப்பை கிளப்பும் வகையில் துப்பாக்கிசூடு நடத்தினார். திடீரென இந்த நபர் துப்பாக்கிசூடு நடத்தியதை பார்த்தவுடன் […]
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்தநிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “ஒரு பெண்ணின் ஆடையை களைவது, அவரது மார்பை பிடிப்பது அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது போன்ற செயல்கள் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியாக கருதப்படாது” என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிரித்து கொண்டு கைகளால் சைகை காட்டிய வீடியோ வைரலானதை அடுத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவின் பின்னணியில் ‘ஜன கண மன…’ என்ற தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், நிதிஷ் தன் அருகில் நிற்கும் முதலமைச்சரின் […]
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் மட்டும் 930-க்கும் மேற்பட்ட இத்தகைய புகாரில் சிக்கியிருந்தார்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே என்பதும் தெரிய வந்தது. இது போன்ற மோசடியில் வயதானவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது வருகிறது. இந்த சூழலில் மும்பையை சேர்ந்த 86 வயது முதிய பெண் […]
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர். இது வெறும் மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்ல இந்த சந்திப்பின் போது, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், புத்தகம், நிலைத்தன்மை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உருவாக்குவது குறித்து முக்கியமான விவாதங்களை நடத்தியுள்ளனர். தொழிலதிபர் பில் கேட்ஸ், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் தொண்டு நிறுவனங்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் […]
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி சென்றிருந்தார்கள். திடீரென அவர்கள் சென்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 9 மாதங்கள் அவர்கள் விண்வெளியில் இருந்த நிலையில், பின்னர் பல்வேறு கட்டமுயற்சிக்கு பிறகு ஃபால்கான் ராக்கெட் […]