டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று […]
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கியது, வரும் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துவிட்டு, அது தொடர்பாக பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் […]
டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு […]
டெல்லி : இலங்கை அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்க, முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேசினார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு பேசிய இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு உறவுகள், இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றியும் பேசினார். மேலும், […]
டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயகா, இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றைய தினம் இந்தியா வந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார். இந்த நிலையில், இன்று காலை புது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லதிற்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயகேவை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இலங்கையில் செப்டம்பரில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
டெல்லி : மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் சுத்தம் செய்ய முடியாது. எமர்ஜென்சி காலத்தில் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய பதவியை காப்பாற்றவே […]
டெல்லி : மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளுக்காக இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் இந்தியாவை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமையான தருணம். இந்த 75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல, நம்மளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளை முறியடித்து. இந்திய அரசியலமைப்பு தான் நம்மை […]
டெல்லி : பாஜக மூத்த தலைவரும் , முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், அத்வானி உடல்நிலை நிலவரம் குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழு , அத்வானி உடல்நிலை குறித்து கவனித்து […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல, நேற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் மிக முக்கிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று அல்லது நாளை அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என […]
சிங்கப்பூர் : நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது […]
கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்ப்பட்டது . இந்த நிகழ்வு குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். வைக்கம் 100 : கேரளா மாநிலம் கோட்டையத்தில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை […]
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் […]
டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அதில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய தலைநகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது குறித்து பேசிய பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் […]
கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில மூத்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” வைக்கம் நூற்றாண்டு விழா கேரளா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல, புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவாக விழாவுக்கும் எங்களுடைய அழைப்பை ஏற்று […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பிறகு, வைக்கம் […]
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவாக அமைக்கப்பட்ட நினைவகம், தமிழக […]
சென்னை : தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெறுபவரின் விவரத்தை தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி […]
வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்க உள்ளனர். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்று […]
புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடைக்கும் போது பல இடங்களில் கனமழை பெய்து புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை […]
ஆந்திரா : திருப்பதியில் திவ்யா என்கிற பெண் 2 லட்சம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். டாமி என்கிற இந்த நாய் டிசம்பர் 10-ஆம் தேதி இருவரை பார்த்து குறைத்த நிலையில், அந்த நாயை இரண்டு பேர் முதலில் கல்லை வைத்து எறிந்துள்ளனர். இருப்பினும் நாய் குறைத்ததை நிறுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் திவ்யா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் நடந்த […]