பெரியார் நினைவகத்தை ஒன்றாக திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் – பினராயி விஜயன்!
கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர்.

கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவாக அமைக்கப்பட்ட நினைவகம், தமிழக அரசின் ரூ.8.14 கோடி நிதி உதவியால் புனரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. தற்போது அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். பெரியார் நினைவகத்தில் தந்தை பெரியார் உடன் மற்ற அரசியல் தலைவர்கள் உடனான புகைப்படங்கள் மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.
அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி இரு முதலமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அப்போது தமிழக முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தகத்தை கேரளா முதலமைச்சருக்கு பரிசளித்தார்.
இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர் துரைமுருகன், விசிக தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025