போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்தியா!!பதிலுக்கு ட்ரோன் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்பிய பாகிஸ்தான்!!

பாகிஸ்தான்  குஜராத்தின் கூட்ச் பகுதியில் ட்ரோன் விமானத்தை உளவுபார்க்க அனுப்பியது. drone planes Pakistan

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை.

பாகிஸ்தான்  குஜராத்தின் கூட்ச் பகுதியில் ட்ரோன் விமானத்தை உளவுபார்க்க அனுப்பியது.

கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை  தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட்,  முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள  தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும்  விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.

unknown node

ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.

இதன் பின்னர் குஜராத்தின் கூட்ச் பகுதியில் உள்ள விமான தளத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு  புறப்பட்டது.ஆனால்  இந்திய விமானப்படையின் பலத்தை அறிந்த உடன் பாககிஸ்தான்  போர் விமானங்கள் பின் வாங்கியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இடங்களில் மிராஜ் 2000 போன்ற போர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்திய நிலையில் அதன் பின்னர் பாகிஸ்தான்  குஜராத்தின் கூட்ச் பகுதியில் ட்ரோன் விமானத்தை உளவுபார்க்க அனுப்பியது.ஆனால் அந்த ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் இந்தியா போர்விமானங்களை பயன்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானத்தை பயன்படுத்தி அதில் ஏமாற்றமும் அடைந்துள்ளது.