மணமேடையில் மணமகள் இறந்ததால், மணமகளின் தங்கைக்கு மணமுடித்த பெற்றோர்..!

Default Image

மணமேடையில் மணமகள் இறந்ததால், மணப்பெண்ணின் பெற்றோர் அவரின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் எடவாடா மாவட்டத்தில் ஜமஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரபி என்ற பெண்மணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மங்கேஷ் குமார் என்பவரோடு  திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது மணமகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மயங்கி இருப்பதாக நினைத்து தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். ஆனால், அப்பெண் எழவில்லை.

அதன் பிறகு மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில், மணமகள் சுரபி மாரடைப்பால் இறந்திருப்பது தெரிய வந்தது. செய்வதறியாது தவித்த பெற்றோர் மணமகன் வீட்டில் உள்ளவர்களிடம் சுரபியின் தங்கையான நிஷாவை மணமகனுக்கு திருமணம் செய்ய கேட்டுள்ளனர்.

அதற்கு மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், இறந்த சுரபியை ஒரு அறையில் வைத்துவிட்டு, சுரபியின் தங்கையை வேறு அறையில் வைத்து மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies