உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஹோட்டல்கள், நீதிமன்றங்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன.
மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி,
வாடிக்கையாளர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
சாப்பிடும் பொது தவிர, நேரங்களில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பார்வையாளர்கள் தங்கள் விவரங்களை நிர்வாக மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் பெற வேண்டும்.
டிஜிட்டல் பயன்முறையின் மூலம் பணம் செலுத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.
கழிவறைகள் மற்றும் கை கழுவும் பகுதிகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் முழுமையாக செயல்பட வேண்டும் மற்றும் சமைத்த உணவை மட்டுமே மெனுவில் சேர்க்க வேண்டும் மற்றும் சாலடுகள் போன்ற மூல அல்லது குளிர்ந்த உணவை தவிர்க்க வேண்டும்.
தளபாடங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.