அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு பிளாஸ்மா சிகிச்சை.!

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் நிலை மோசமடைந்த பிறகு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கடந்த 26-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , தருண் கோகய்க்கு நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவரது உடல் நிலை இன்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் மருத்துவமனையில் தருண் கோகய் உடன் இருந்தேன், நாளை சட்டசபை இருப்பதால் வீட்டிற்கு திரும்பி வந்தேன். மருத்துவ குழுவுடன் எங்கள் குழு தொடர்பில் இருக்கிறது என தெரிவித்தார்.
I was there with Sri @tarun_gogoi in the hospital and just reached back home as I have assembly tomorrow. Also had a telephonic conversation with @GauravGogoiAsm. I shall remain in touch with our team at @GMCHGuwahati. https://t.co/8mVy9jcRHx
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025