புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

PM Narendra Modi inaugurated and laid the foundation stone of several development projects in Puducherry.

புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி  இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படிஇன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ,திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டிய விவரங்கள் இதோ.

புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான  4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி ஜிப்மெர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.