ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.!

Default Image

ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.வி.சாரணையில் திடுக்கிடும் தகவல்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு குடோனனில் நடந்த போலீசார் சோதனையின்போது ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து நடத்திய இந்த சோதனையில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு குற்றவாளியைக் கைது செய்ய டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு அம்ரோஹாவுக்கு வந்தது. எங்கள் பொலிஸ் குழுவும் அவர்களுடன் இருந்தது. ஒரு டோனனில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய சந்தன கட்டையை நாங்கள் பறிமுதல் செய்தோம் என்று அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தந்தா கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் சந்தனக் கடத்தலைப் அனுப்பியது தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சந்தனத்தின் விலை 50 கோடி என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு  வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்