தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காததை அடுத்து மரத்தடியில் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானாவில் உள்ள ஜங்கானில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டத்தை அடுத்து, மரத்தடியில் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணான ஷேக் பீ அவர்கள் தனது தாயார் பாத்திமா பீ உடன் காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஆரம்பத்திலிருந்தே கர்ப்பிணி பெண்ணை சிகிச்சை செய்து வந்த மருத்துவர், கர்ப்பிணி பெண்ணை வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார்.
ஆனால் ,ஆம்புலன்ஸ் இல்லாததால் மகள் மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரத்தின் கீழ் வைத்து ஒரு குழந்தையை பிரசவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து தான், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் தாயார் கூறியதாவது, தனது மகள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், அவர்கள் இரண்டு பேரின் தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…