புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு : என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் ஓர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி காவல்துறை

NIA

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் ஓர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுச்சேரி கலாபட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை மேற்கொள்ள தீவிரவாத செயல்களை தடுக்கும், விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகாமையான என்ஐஏ-விடம் வழக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று கேரளாவில் இருந்து தமிழகம் வந்த NIA அதிகாரிகள் , செந்தில் குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் நித்யானந்தா என்பவர் தங்கியிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

காலை 11 மணி முதல் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.