மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி இணைந்து பணியாற்றா விட்டால் ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
unknown nodeஇந்த அறிவிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் அஷ்வனி மகாஜன் விடுத்துள்ள அறிக்கையில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.அவ்வாறு இணங்கி செயல்பட முடியாவிட்டால் உடனே ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அப் பதவியில் இருந்து விலக வேண்டுமென கூறியுள்ளார்.
unknown nodeமேலும் இது குறித்து தெரிவிக்கையில் நாட்டின் நடைமுறை என்ன என்பது தெரியாமல் ரிசர்வ் வங்கி அடம்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளார்.
unknown nodeமேலும் வெளிநாட்டில் படித்தவர்களை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க கூடாது. உள்நாட்டில் நாட்டு பற்று மிக்கவர்களை பொறுப்பில் அமர்த்த வேண்டுமென்றும் மகாஜன் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeDINASUVADU