ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும்- அதிர் ரஞ்சன் சவுத்ரி..!

நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று கூறிய நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் சிங் உயிரிழந்தற்கு நாங்கள் அனைவரும் வேதனை அடைகிறோம், ஆனால் ஒரு பெண்ணை குற்றவாளி என்று பொய்யாகக் குறிப்பிடக்கூடாது.ரியா ஒரு அப்பாவி பெண் என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். மேலும் துன்புறுத்தல் இல்லாமல்அவரை விடுவிக்கப்பட வேண்டும், அவர்அரசியல் சதித்திட்டத்தின் பாதிக்கப்பட்டவர் என்று அதிர் ரஞ்சன் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025