குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
மழை குறுக்கிட்ட போதிலும் கடைசி திக் திக் நிம்டங்களில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை அணி சார்பாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய, ரியான் ரிக்கல்டன் 02 ரன்களிலும், ரோஹித் சர்மா 07 ரன்களிலும் ஆட்டமிழந்தனர், ஆனால் பின்னர் வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மேலும், சூர்யகுமார் யாதவும் விரைவாக ரன்கள் எடுக்க உதவினார். சூர்யா 24 பந்துகளில் 35 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 35 பந்துகளில் 53 ரன்களிலும் அவுட்டான பிறகு மும்பையின் இன்னிங்ஸ் திடீரென தடுமாறியது. இறுதியில், கார்பின் போஷ் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்க என 27 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார்.
ஆனால், கடைசி ஓவரில் போஷ் ரன் அவுட் ஆனார். தீபக் சாஹர் 8 ரன்களுடனும், கரண் சர்மா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான், முகமது சிராஜ், ரஷித் கான், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்ஷன் 5 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, இரண்டாவது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் மற்றும் ஜோஸ் பட்லர் இடையே கூட்டணி 72 ரன்கள் சேர்த்தனர். பட்லர் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷுப்மான் கில், 46 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மறுமுனையில், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தாக்க வீரராக வந்துள்ள ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்ததாக ஷாருக்கான் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், ரஷித் கான் வெறும் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து பெவிலினுக்கு திரும்பினார்.
கடைசியாக, 18 ஒவரில் ராகுல் டிவாட்டியா 5 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க, ஜெரால்ட் கோட்ஸி 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்ததிருந்த போது, மழை காரணமாக போட்டி பாதி நிரம் நிறுத்தப்பட்டது. இப்பொது, மழை நின்றதும், மேற்பரப்பை மூடியிருந்த தாருபாய் இப்போது அகற்றப்பட்டு கடைசி 2 ஓவருக்கு பதிலாக 1 ஓவராக மாற்றம் செய்யப்பட்டது.
ஓவரில் மாற்றம்
மழை காரணமாக 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற தேவையில் போட்டி துவங்கிய நிலையில், முதல் பந்தில் ராகுல் டிவாட்டியா பவுண்டரி எடுத்து மாஸ் காட்டினார். இரண்டாவது பந்தில், ஒரு சிங்கிள் ஓடி, மூன்றாவது பந்தில் ஜெரால்ட் கோட்ஸி சிக்ஸ் அடித்தார். நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்க, அந்த பந்து நோ பாலாக எடுத்து கொல்லப்பட்டது. மீண்டும் நான்காம் பந்தில் ஒரு எடுக்க, ஜெரால்ட் கோட்ஸி 2 பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்கிற தருணத்தில் அவுட்டாகினார்.
கடைசி ஒரு பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்கிற திக் திக் நிமிடங்களில் களமிறங்கிய அர்ஷத் கான், அந்த ஒரு ரன்னை எடுத்து கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.