சபரிமலை :இலகு ரக வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி..!

Default Image

சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் நிலக்கல் வரை வாகனங்களில் செல்லலாம்.அதன் பின் கேரளா அரசு பேருந்தில் இருந்து பாம்பை வரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கேரளா அரசு கடந்த ஆண்டு விதித்தது.
ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழையால் பம்பை பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என முடிவு எடுத்தது.இதை தொடர்ந்து ஆலப்புழா  பகுதியை சார்ந்த பிரசன்னா என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் “நிலக்கல் முதல் பம்பை வரை  இலகு ரக வாகனங்களில் செல்ல அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.இந்த வழக்கை நீதிபதி ரவிக்குமார் மற்றும் நகரேஷ் அமர்வுக்கு நேற்று வந்தது.அப்போது பம்பைக்கு இலகு ரக வாகனங்களில் அனுமதி வழங்கினார்.
மேலும் இந்த வாகனங்கள் பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டு பின் மீண்டும் நிலக்கல் வரவேண்டும் அங்கு உள்ள சாலைகளில் நிறுத்தக்கூடாது எனவும் , இந்த உத்தரவு இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது எனவும் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts