ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட் பா.ஜக ஆதரவுடன் முதல்வராக திட்டமிட்டு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மேலிடம் முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, தொடர்ந்து பைலட் முயற்சித்து வருவதாகவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து, பா.ஜ., தலைவர்களுடன் இது குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராஜஸ்தான் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகிறது.மேலும் பைலட் தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறார்.
பா.ஜக கட்சியில் இணைவது, பைலட்டின் திட்டமல்ல. அதற்குப் பதிலாக, பா.ஜக ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதே, அவரது திட்டமாம். ஆனால் இவ்விவகாரத்தில் பா.ஜக., தலைவர்கள் இடையே சற்று தயங்கம் காணப்படுவதாக பாஜக வட்டார தகவலும் வந்து சேருகின்றது.ஆனாலும் தொடர்ந்து, பா.ஜக தலைவர்கள் உடன் பைலட் பேச்சு நடத்தி வருவதாகவும் இதற்காக டில்லியில் தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் பா.ஜகவில் இணைய சம்மதித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்’ என்று பைலட்டிடன் பா.ஜ., தலைவர்கள் தரப்பில், கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் ராஜஸ்தான் அரசியல் களம் பாலைவனத்தை விட வெப்பம் மிகுந்து காணப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…