குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறப்பு.!

Default Image

குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து குஜராத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.இருந்தாலும், தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முடிவை நேற்று அறிவிப்பது குறித்து கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு செய்வதாக அம்மாநில அரசு கூறியது.

இது குறித்து, கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறியதாவது,”குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.

அந்த வகையில், “தீபாவளிக்குப் பிறகு, நவம்பர் 23 முதல், அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அந்தந்த வளாகத்தில் கல்வி கற்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசின் நிலையான இயக்க நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது என்றாலும், அரசு வழங்கும் படிவத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல்களைப் பெற வேண்டும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்